அகநானூறு - 51. பாலை
ADVERTISEMENTS
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக்
கதிர் தெற,
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி
ADVERTISEMENTS
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது,
ADVERTISEMENTS
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
சேயிழை தௌர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.
பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார்
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார்