அகநானூறு - 313. பாலை
ADVERTISEMENTS
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும்,
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க,
ஐய ஆக வெய்ய உயிரா,
ADVERTISEMENTS
இரவும் எல்லையும் படர் அட வருந்தி,
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப,
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய,
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து,
வருவர் வாழி, தோழி! பெரிய
ADVERTISEMENTS
நிதியம் சொரிந்த நீவி போலப்
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை,
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர்
வசி படு புண்ணின் குருதி மாந்தி,
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல,
இல் வழிப் படூஉம் காக்கைக்
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி
வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ