அகநானூறு - 322. குறிஞ்சி
ADVERTISEMENTS
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்;
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,
பாம்பு எறி கோலின் தமியை வைகி,
ADVERTISEMENTS
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக்
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன்
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்,
ADVERTISEMENTS
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக்
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை,
புகல் அரும், பொதியில் போலப்
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே!
அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்