ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

அகநானூறு - 200. நெய்தல்

ADVERTISEMENTS

நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்,
புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை,
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து,
இன்னா உறையுட்டுஆயினும், இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள்,
ADVERTISEMENTS

தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப!
பொம்மற் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற,
ADVERTISEMENTS

நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று,
சேந்தனிர் செல்குவிர்ஆயின், யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்;
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.



தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக்
குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்