அகநானூறு - 131. பாலை
ADVERTISEMENTS
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப்
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன,
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என
ADVERTISEMENTS
வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
ADVERTISEMENTS
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம், 'நம்மொடு
வருக' என்னுதிஆயின்,
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத்
தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார்
தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார்