அகநானூறு - 251. பாலை
ADVERTISEMENTS
தூதும் சென்றன; தோளும் செற்றும்;
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்;
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்
ADVERTISEMENTS
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
ADVERTISEMENTS
பணியாமையின், பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்,
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி
மா நிலம் நௌயக் குத்தி, புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடைப் போகி,
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது
வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார்
வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார்