அகநானூறு - 201. பாலை
ADVERTISEMENTS
அம்ம, வாழி தோழி! 'பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,
ADVERTISEMENTS
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை,
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும்
ADVERTISEMENTS
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்' என்று
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன்,
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத்
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி
சொல்லியது. - மாமூலனார்
சொல்லியது. - மாமூலனார்