அகநானூறு - 297. பாலை
ADVERTISEMENTS
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி,
ADVERTISEMENTS
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்
ADVERTISEMENTS
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
எழுதியன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம்
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம், நம்மொடு,
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே?
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்