அகநானூறு - 299. பாலை
ADVERTISEMENTS
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை
ADVERTISEMENTS
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென,
ADVERTISEMENTS
வைகு நிலை மதியம் போல, பையென,
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப,
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல் மாண்டு
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா,
பருவரல் எவ்வமொடு அழிந்த
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார்
நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார்