ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

அகநானூறு - 210. நெய்தல்

ADVERTISEMENTS

குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர்
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட,
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த்
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து,
ADVERTISEMENTS

நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி,
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க்
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி,
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன்
ADVERTISEMENTS

சாயல் மார்பின் பாயல் மாற்றி,
'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச்
செலவு அரிது என்னும்' என்பது
பல கேட்டனமால் தோழி! நாமே.



தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது. - உலோச்சனார்