அகநானூறு - 319. பாலை
ADVERTISEMENTS
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி,
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை,
ADVERTISEMENTS
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை,
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை,
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின்
ADVERTISEMENTS
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத்
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள்,
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
'செல்வேம்' என்னும் நும் எதிர்,
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு
அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்