அகநானூறு - 269. பாலை
ADVERTISEMENTS
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறுமார்,
ADVERTISEMENTS
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
ADVERTISEMENTS
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர,
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தௌ விளி இயம்ப,
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
திரு நுதல் மகளிர் குரவை அயரும்
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி
வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார்
வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார்