அகநானூறு - 146. மருதம்
ADVERTISEMENTS
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
ADVERTISEMENTS
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள்தானே எம் போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
ADVERTISEMENTS
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள்
வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்
வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்