அகநானூறு - 350. நெய்தல்
ADVERTISEMENTS
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,
எறி திரை ஓதம் தரல் ஆனாதே;
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே;
ADVERTISEMENTS
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,
ADVERTISEMENTS
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே!
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி
சொல்லியது. - சேந்தன் கண்ணனார்
சொல்லியது. - சேந்தன் கண்ணனார்