அகநானூறு - 208. குறிஞ்சி
ADVERTISEMENTS
யாம இரவின் நெடுங் கடை நின்று,
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
ADVERTISEMENTS
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ADVERTISEMENTS
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப்
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து,
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல்
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
கார் மலர் கடுப்ப நாறும்,
ஏர் நுண், ஓதி மாஅயோளே!
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்