அகநானூறு - 206. மருதம்
ADVERTISEMENTS
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம்,
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத்
ADVERTISEMENTS
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
ஆராக் காதலொடு தார் இடை குழைய,
ADVERTISEMENTS
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
பெரு பெயற்கு உருகியாஅங்கு,
துஇதிருந்ழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத்
தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார்
தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார்