அகநானூறு - 221. பாலை
ADVERTISEMENTS
நனை விளை நறவின் தேறல் மாந்தி,
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ,
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என,
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல்,
ADVERTISEMENTS
மதி உடம்பட்ட மை அணற் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து,
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின்
தண் நறு முச்சி புனைய, அவனொடு
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை,
ADVERTISEMENTS
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
இரும் பிடி இரியும் சோலை
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி
தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார்
தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார்