அகநானூறு - 140. நெய்தல்
ADVERTISEMENTS
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
ADVERTISEMENTS
சில் கோல் எல் வளை தௌர்ப்ப வீசி,
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,
ADVERTISEMENTS
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி,
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும்
தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்
தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்