அகநானூறு - 41. பாலை
ADVERTISEMENTS
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
ADVERTISEMENTS
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தௌ விளி புலம்தொறும் பரப்ப,
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,
ADVERTISEMENTS
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய,
நுண் பல் தித்தி, மாஅயோளே?
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து,
கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார்
கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார்