அகநானூறு - 245. பாலை
ADVERTISEMENTS
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி,
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்,
ADVERTISEMENTS
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர், எல் உற,
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள்
ADVERTISEMENTS
கான யானை வெண் கோடு சுட்டி,
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம் மா அரிவை ஒழிய,
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி,
தலைமகன் சொல்லி, செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
தலைமகன் சொல்லி, செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்