அகநானூறு - 225. பாலை
ADVERTISEMENTS
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளை,
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற
ADVERTISEMENTS
அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்,
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து,
யாத்த தூணித் தலை திறந்தவைபோல்,
ADVERTISEMENTS
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர,
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
செறி தொடி முன்கை, நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன்
சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்