அகநானூறு - 195. பாலை
ADVERTISEMENTS
'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே,
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி,
உவந்து, இனிது அயரும் என்ப; யானும்,
ADVERTISEMENTS
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள்,
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய
நலம் புனை உதவியும் உடையன்மன்னே;
ADVERTISEMENTS
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல;
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி,
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல்,
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்;
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்,
எம் மனை முந்துறத் தருமோ?
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே?
மகட் போக்கிய நற்றாய் சொல்லியது. -
கயமனார்
கயமனார்