அகநானூறு - 33. பாலை
ADVERTISEMENTS
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
ADVERTISEMENTS
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
தௌயா நோக்கம் உள்ளினை, உளி வாய்
ADVERTISEMENTS
வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
யாமே எமியம் ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள்,
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம்
செய்வினை ஆற்றுற விலங்கின்,
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே?
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்