அகநானூறு - 185. பாலை
ADVERTISEMENTS
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய,
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து,
இரும்பின் இன் உயிர் உடையோர் போல,
வலித்து வல்லினர், காதலர்; வாடல்
ADVERTISEMENTS
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர்
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய,
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
ADVERTISEMENTS
பெரு விழா விளக்கம் போல, பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச்
சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ
சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ