அகநானூறு - 214. முல்லை
ADVERTISEMENTS
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்,
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம்
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி,
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது;
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை,
ADVERTISEMENTS
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை,
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே;
அமரும் நம் வயினதுவே; நமர் என
நம் அறிவு தௌந்த பொம்மல் ஓதி
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப்
ADVERTISEMENTS
படு சுவற் கொண்ட பகு வாய்த் தௌ மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப,
ஆர் உயிர் அணங்கும் தௌ இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே?
பாசறைக்கண் தலைமகள் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்