அகநானூறு - 170. நெய்தல்
ADVERTISEMENTS
கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ,
ADVERTISEMENTS
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு
ADVERTISEMENTS
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
'நின் உறு விழுமம் களைந்தோள்
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற்
சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்